மீண்டும் சொதப்பிய இந்திய அணி.. 2-வது டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் - இஷான் கிஷன் ஜோடி சிறப்பாக விளையாடியது. இஷான் கிஷன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பண்ட் 5 ரன்னிலும், பாண்டியா 9  ரன்னுடன் வெளியேறினர். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது.

இதையடுத்து,149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி கேப்டன் பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக கிளாசன் 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 20  ரன்னுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக வெற்றி பெற்றது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி 2 - 0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ind vs Sa 2nd t20 match sa win


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->