உலகக் கோப்பை கால்பந்து : கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ.. போர்ச்சுக்கல், இங்கிலாந்து அவுட்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில் இருந்து காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டிகள் முடிவடைந்தது.
 
இதில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் மொரோக்கோ – போர்ச்சுக்கல் அணிகள் மோதின. 1-0 என்ற கணக்கில் மொரோக்கோ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற கால் இறுதி போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.

 அதன்படி, டிசம்பர் 14ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா - குரேஷியா அணிகள் மோதுகின்றன.

டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மொரோக்கோ - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA World Cup semifinal shedule


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->