ஆஷஸ் டெஸ்ட் சாதனை: தனிநபர் சதம் இல்லாமல் 511 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அசத்தல்!
eng vs aus 5th highest score
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், எந்த ஒரு வீரரும் சதம் அடிக்காத நிலையிலும், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்துச் சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கூட்டு முயற்சி
இங்கிலாந்து ஸ்கோர்: இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 177 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்த இன்னிங்ஸில், ஜேக் வெதரால்டு (72), மார்னஸ் லபுஷேன் (65), ஸ்டீவ் ஸ்மித் (61), அலெக்ஸ் கேரி (63) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (77) என மொத்தம் ஐந்து வீரர்கள் அரைசதம் கடந்து வலுவான கூட்டு முயற்சியை வெளிப்படுத்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை
தனிநபர் சதம் எதுவும் அடிக்காமல் 511 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் சதம் இல்லாமல் 5-வது அதிகபட்ச ஸ்கோரை குவித்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை அணி எடுத்த 531 ரன்களுடன் முதலிடத்திலும், இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக எடுத்த 524 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
English Summary
eng vs aus 5th highest score