ராணுவ உடையுடன் தோனி., வைரலாகும் புதிய புகைப்படம்!!
dhoni viral photo
உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி காஷ்மீரில் ராணுவப் பணிக்கு செல்ல போவதாக அறிவித்தார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்ற தோனி இந்திய ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் தற்போது மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செவ்வாய்கிழமை காஷ்மீரில் ராணுவப்படையில் சேர்ந்த தோனி ராணுவ வீரர்களுடன் பணியாற்றிவருகிறார், தற்போது ராணுவ சீருடையில் தோனி கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் தோனி பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என தெரிகிறது.