சிஎஸ்கே தோற்கவேண்டும் என விரும்பிய தோனியின் ரசிகர்கள்!! வியக்கவைக்கும் காரணம்!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கவேண்டும் என தோனியின் ரசிகர்கள் வேண்டியுள்ளனர். அதற்கு காரணத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது இரண்டாவது பிளே ஆப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. எனவே தோனி தலைமையிலான சென்னை அணி விசாகப்பட்டிணத்துக்கு வரவேண்டும், அங்கு தோனியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக விசாகப்பட்டிண ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொதுவாக விசாகப்பட்டிணம் மைதானம் தோனிக்கு சாதகமான மைதானம். ஏனென்றால் இந்த மைதானத்தில் தான் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் விளாசினார் தல தோனி. அதற்காக தன இரண்டாவது பிளே ஆப் சுற்றில் சென்னை விளையாட வேண்டும் என விரும்பினோம். 

அதேபோல் முதல் பிளே ஆப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து, இரண்டாவது பிளே ஆப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து விசாகப்பட்டிண ரசிகர்களின் ஆசை படியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் தோனியின் ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றியது. அந்த ஆட்டத்தில் தல தோனி 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இந்தநிலையில் ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இன்று இரவு 7:30 மணிக்கு கைதராபாத்தில் இறுதி போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இதுவரை இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் சென்னை அணி அணைத்து அணிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நான்காவது முறையாக இந்த இரு அணிகளும் இன்று இறுதி போட்டியில் மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk fans feel for MS Dhoni Team will loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->