அதிரடி காட்டிய ருதுதுராஜ்.. ஹைதராபாத்தை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்ட்வாட், கான்வே ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

சென்னை அணி 182 ரன்கள் எடுத்தபோது தான் முதல் விக்கெட்டை இழந்தது. மேலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் கான்வே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 39 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும், பூரான் 64 ரன்களும் எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai super kings won by 13 runs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->