ஐபிஎல் மினி ஏலம்.. ரூ.16.25 கோடிக்கு அதிரடி ஆல் ரவுண்டரை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.! - Seithipunal
Seithipunal


ரூ.16.25 கோடிக்கு இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி ஆல்ரவுண்டரான பெண் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள வீரர்கள் ;

பெண் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி

அஜின்க்யா ரகானே - 50 லட்சம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai super kings bought Ben stokes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->