காயம் அடைந்த இவர்களின் தற்போதைய நிலை என்ன? பிசிசிஐ கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - Seithipunal
Seithipunal


இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடப்பாண்டு இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகி உள்ள வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 5 வீரர்களின்  மருத்துவ மற்றும் உடற்பயிற்சி குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டது.

ஜஸ்பிரித் பும்ரா & பிரசித் கிருஷ்ணா:

இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் காயத்திலிருந்து மீண்டும் இறுதி கட்டத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் வலை பயிற்சியில் முழுமையாகவும் தீவிரமாகவும் பந்து வீசுகின்றனர். இருவரும் இப்போது சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார்கள். பிசிசிஐ மருத்துவக் குழு இவர்களின் உடல் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடைந்துள்ளது மற்றும் பயிற்சி ஆட்டங்களைத் தொடர்ந்து அவர்களை மதிப்பீடு செய்த பிறகு இறுதி முடிவை எடுக்கப்படும்.

கே.எல் ராகுல் & ஷ்ரேயாஸ் ஐயர்:

இவர்கள் இருவரும் வலை பயிற்சியில் மீண்டும் பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது உடற்பயிற்சி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிசிசிஐ மருத்துவக் குழு அவர்களின் முன்னேற்றத்தில் திருப்தி அடைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் திறன்கள் மற்றும் கண்டிஷனிங் ஆகிய இரண்டிலும் அவர்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.

ரிஷப் பந்த்: 

இவர் தனது உடல் நலனின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார். அவர் பேட்டிங் மற்றும் வலைகளில் கீப்பிங் செய்ய தொடங்கியுள்ளார். அவர் தற்போது அவருக்காக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தைப் பின்பற்றுகிறார். இதில் உடல் வலிமை, உடல் வளைவு மற்றும் ஓட்டம் ஆகிய பயிற்சிகள் அடங்கும்" என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI released 5 injured players medical status


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->