ஐ.பி.எல் போட்டிக்கு மொத்தமாக ஆப்பு வைத்து அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ..!!
BCCI announce infinatly extend IPL matches
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது மிகவும் அதிகரித்து வந்தது. இதனால் பல உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் கரோனா வைரஸின் பரவல் விகிதம் அதிகரித்து வருவதால், 21 நாட்கள் அமலான ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்து, மே மாதம் 3 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல் விளையாட்டுப்போட்டி நடைபெற தேதிகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. கரோனா வைரஸின் காரணமாக இவை அனைத்தும் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற சந்தேகம் எழுந்தது. ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மே மாதம் 3 ஆம் தேதி வரை ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகளை ஒத்திவைத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைத்து அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஊரடங்கு நீட்டிப்பின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் விளையாட்டு போட்டி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
BCCI announce infinatly extend IPL matches