8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சால், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிக்கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்து இருந்தது. முகமது சிராஜ் வீசிய 7 ஓவர்களில், 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விகேட்கலை வீழ்த்தி அசத்தினார்.  

15.2 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்தது. 

ஹர்திக் 2 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். அதிகபட்சமாக மெண்டிஸ் 17 ரன்னும், ஹிமந்தா 13 ரன்னும் எடுத்தனர். பெரெரா உள்ளிட்ட 5 வீரர்கள் தக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் இந்திய அணி 8 வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் இது இரண்டாவது முறையாகும். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AsianCup2023 INDvsSL India Champion 2023


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->