இன்றைய (20-02-2022) ராசி பலன்கள்.. யாருக்கு வெற்றி.?..யாருக்கு லாபம்.? - Seithipunal
Seithipunal


மேஷம்

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மிதுனம்

உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மூலம் வருவாய் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திருப்திகரமான நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறு தொழில் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் வெற்றி அடைவீர்கள். வசதி மேம்படும் நாள்.

சிம்மம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றத்தை அடைய முடியும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மன உறுதி வேண்டிய நாள்.

துலாம்

உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.  குழந்தைகளின் மூலம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

இழுபறியான தனவரவு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மதிப்பு நிறைந்த நாள்.

மகரம்

வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். ஆசை நிறைவேறும் நாள்.

கும்பம்

உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், அலைச்சலும் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். அலைச்சலால் ஆதாயம் உண்டாகும் நாள்.

மீனம்

மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->