சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி மாலை 5.30  மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி  நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் 19ஆம் தேதி பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்பட்டது.

தற்போது ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30  மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஐயப்பன் பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்பன் பக்தர்கள் வசதிக்காக நிலப்பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala temple today evening open


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->