சபரிமலை ஐயப்பன்..!!! நாளை விசுக்கனி தரிசனம் காண கோவிலில் குவிந்த பக்தர்கள்...! - Seithipunal
Seithipunal


கடந்த 1-ந்தேதி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. பின்னர் மறுநாள் அதாவது 2-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இதில் 10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் தற்போது சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை அதாவது 14-ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்தச் சிறப்பு தரிசனம் முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.இதில் நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர்.

மேலும்  காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம் என கோவில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் சபரிமலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.

இதனால் வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அத்துடன், அன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala Ayyappa Devotees thronged temple Vishukani darshan tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->