சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.!  - Seithipunal
Seithipunal


ராகு கேது பெயர்ச்சி 2022-2023:

வளமான கற்பனையும், எழுச்சியும், சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே...!!

ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

பலன்கள் :

எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மூலிகை தொடர்பான தொழில்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கதை, கட்டுரை போன்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும்.

பொருளாதாரம் :

தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தேவையற்ற ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

பெண்களுக்கு :

திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் உதவி கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் லாபம் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

விவசாயிகளுக்கு :

பயிர் விளைச்சலில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். பாசன வசதிகளின் தன்மைகளை அறிந்து அதற்கேற்ப பயிர் விளைச்சலை மேற்கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி வாகையை சூடுவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மையான சூழல் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

நன்மைகள் :

நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். மேலும் இலக்குகள் பிறக்கும்.

கவனம் :

பயணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர சிந்தனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragu gethu peyarchi 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->