வயதான தம்பதிகள்.. கொரோனா பாதிப்பு அச்சம்.! எட்டிப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி.!
old couples suicide in maduravoyal
சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த 70 வயதான அர்ஜுனனுக்கு அஞ்சலை என்ற 60 வயது மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் யாரும் இல்லாததால் இருவரும் தனியாக தங்களது வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் இன்று தம்பதிகள் இருவரும் வீட்டை விட்டு வெகு நேரமாகியும் பூட்டிய கதவை திறந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளனர். கதவு உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
அர்ஜுனன் அஞ்சலை இருவரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து பிரேத பரிசோதனைக்காக உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது மூன்று நாட்களாக அஞ்சலைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு உறவினர்கள் உணவு கொடுத்து வந்துள்ள நிலையில் மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதால் கொரோனா பாதிப்பாக இருக்கும். எனவே,தம்பதிகள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
English Summary
old couples suicide in maduravoyal