இன்றைய (22.05.19) ராசிபலன் : இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனத்தில் கவனம் தேவை!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். 

ரிஷபம்:

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்படும் மறதியால் பணியில் காலதாமதம் நேரிடலாம். 

மிதுனம்:

ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் நிதானம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கடகம்:

வீடு மற்றும் வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சிம்மம்:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:

தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சார்ந்த சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். 

துலாம்:

விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்கள் ஈடேறும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபமடைவீர்கள்.

விருச்சகம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபகரமான சூழல் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு:

வாக்குவன்மையால்  சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்:

வியாபாரத்தில் புதிய  வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான நிலை ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். அரசு சம்பந்தமான காரியங்களில் இலாபம் உண்டாகும். 

கும்பம்:

பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் பணி சார்ந்த  ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களுடன் விருந்து மற்றும் விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்:

திட்டமிட்டு செயல்படுவது காலதாமதத்தை தவிர்க்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும். முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பிரச்சனைகளின் மூலம் மனக்கவலை தோன்றி மறையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 22 rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->