கரும்பும்... மஞ்சளும்... வைத்து வருடம் முழுவதும் மகிழ்ச்சியடைய... இப்படி செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


சந்தோஷத்திற்கு குறைவில்லாமல் இருக்க என்ன செய்வது?

இந்த வருடம் உங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் எளிமையாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்திருக்கும். பொங்கல் அன்று இருந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் இந்த வருடம் முழுவதும் நிறைந்திருக்க என்ன செய்வது?

இந்த உலகத்தை காத்த காமாட்சியம்மன் நிரந்தரமாக நம் வீட்டில் வந்து அமர்ந்து எல்லா வளங்களையும், சகல ஐஸ்வர்யங்களையும் தந்து அருள்புரிய பொங்கலுக்கு வாங்கிய கரும்பையும், மஞ்சளையும் வைத்து இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். இதை செய்வதால் அடுத்த வருடத்திற்குள் நீங்களே எதிர்பார்க்காத பல நன்மைகள் உங்கள் வீட்டில் நடக்கும்.

பொங்கலுக்கு வாங்கிய கரும்பும், மஞ்சளும் வீட்டில் நிறைவாக இருக்கும். தை திருநாள் அன்று பொங்கல் உங்களுடைய வீட்டில் எப்படி பொங்கி வழிந்ததோ... அதேபோல ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? 

உலகத்தை காத்தருளும் காமாட்சியம்மன் தன்னுடைய கைகளில் வைத்திருக்கும் கரும்பு, இன்று நாம் எல்லோரது வீட்டிலும் இருக்கின்றது. மங்களத்திற்கு உரிய மஞ்சளும் வீட்டில் இருக்கின்றது. அதுவும் சுத்தமான பச்சையான மஞ்சள் கிழங்குகள்.

கரும்பில் இருந்து ஒரு சிறிய துண்டையும், மஞ்சளையும் எடுத்து அதில் இருக்கும் ஈரப்பதம் போக வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு பொருட்களையும் ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக்கொள்ளுங்கள். 

இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆணியில் மாட்டி தொங்க விட்டால் கூடபோதும்.

தினமும் வீட்டில் தீபம் ஏற்றும்போது காமாட்சி அம்மனை நினைத்து தீபம் ஏற்றிவிட்டு, பூஜை அறையில் ஊதுபத்தி காண்பிக்கும்போது நீங்கள் கட்டி வைத்திருக்கும் மஞ்சள் முடிச்சுக்கும் ஊதுபத்தி காண்பித்து காமாட்சி அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கட்டிய இந்த முடிச்சினை அடுத்த வருடம் வரக்கூடிய போகி அன்று தான் பூஜை அறையில் இருந்து எடுக்க வேண்டும். 

தேவைப்பட்டால் அடிக்கடி எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முடிச்சை அவிழ்க்க வேண்டாம்.

இந்த முடிச்சு உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் நிச்சயமாக கஷ்டம் என்பது இருக்காது. 

பொங்கல் அன்று எவ்வளவு சந்தோஷத்தை, உங்கள் மனதில் நீங்கள் அனுபவித்தீர்களோ அதே அளவு சந்தோஷத்தை தினம் தினம் உங்களால் அனுபவிக்க முடியும். 

காமாட்சி அம்மன் உங்கள் வீட்டில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

majal karumpu parikaram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->