கடன் சுமையை குறைத்து.. பணவரவை அதிகரிக்க செய்யும்.. மகாலட்சுமி கோமதி சக்கரம்..!!
Mahalakshmi Gomathi chakkaram uses
மகாலட்சுமி கோமதி சக்கரம்
மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. சுவாசம், பேச்சு, செயல்பாடு என்று எதிலும் இந்த பணத்திற்குதான் முதலிடம் கொடுக்கிறோம்.
அரும்பாடுபட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரமாட்டேன் என்கிறதே என்பதுதான் மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.
கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மையுடையது மற்றும் வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மையுடையது.
கோமதி சக்கரம் வழிபடும் முறை :
கோமதி சக்கரத்தை காய்ச்சாத பசும்பாலில் அபிஷேகம் செய்த பின்பு தூய்மையான நீரில் கழுவி நன்றாக துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு செம்பு தட்டில் சிவப்பு வண்ண துணியின் மீது கோமதி சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, பூ வைத்து மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ அல்லது பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாகவோ உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
வலம்புரி சங்கு வழிபடும் முறை :
வலம்புரி சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம், குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பின் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும்.
உங்களின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் தன்மையுடையது இந்த கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.
இந்த பொருட்கள் ஓர் இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும். தீய சக்திகள், எந்தவித தடைகள் மற்றும் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
English Summary
Mahalakshmi Gomathi chakkaram uses