இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் துறையானாலும் அதில் வெற்றிதான்...!
iypasi matham piranthavargalin kunanalangal
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்:
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். தேசபக்தியும் அவர்களுக்கு இருக்கும்.
ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகளான தீபாவளியும், கந்தனுக்கு எடுக்கும் சஷ்டி விழாவும் வருவதால் கண்ணனையும், கந்தனையும் வழிபட்டு வந்தால், மன்னரைப் போன்ற வாழ்க்கை அமையும்.
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அறிவில் சிறந்தவர்கள். மிகுந்த பொறுமைசாலிகள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.
இம்மாதத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கடினமான வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். நேர்மையானவர்கள். இவர்கள் சிறு விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டிருப்பார்கள்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள்.
இவர்கள் கலைத்துறை, எழுத்துத் துறை, ஆடை, ஆபரண, அலங்காரப் பொருள் விற்பனை நிலையம் போன்ற தொழிலில் வளர்ச்சியைக் கூட்டிக்கொள்வார்கள்.
இவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் இவர்கள் சிறு உபாதைகளைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஐப்பசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள, கண்ணன் வெண்ணெய் உண்ணும் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.
இவர்கள் கண்ணனை வழிபட்டால் செய்யும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
English Summary
iypasi matham piranthavargalin kunanalangal