பூஜையறையில் வைத்து வணங்க வேண்டிய படங்கள்!
god photos in home
பூஜையறையின் சிறப்பு :
கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் முகத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் இருந்தால் தான் அவற்றின் வேலையும் சரியாக இருக்கும், பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். அதுபோல வீட்டிலும் பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து, தக்கவைத்து சரியான அளவில், அங்கு வாழ்பவர்களுக்கு சிறந்த விஷயங்களை வழங்குவதில் பூஜையறை பெரும்பங்கு வகிக்கின்றது.
பூஜையறையில் இருக்க வேண்டிய படங்கள் :
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செந்தூர் அல்லது பழனி முருகர், திருப்பதி வெங்கடாசலபதி, உறங்கா அரங்கனையே ஆண்ட ஆண்டாள், சமயபுரம் மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சியம்மன் மற்றும் அவரவர் குல தெய்வங்களின் படங்கள். இவற்றை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். அன்னபூரணி சிலை இருந்தால் தினமும் அரிசி மாற்ற வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு மேல் பூஜைக்கு நேரம் ஒதுக்குவது கூடாது.
அதி அற்புதமான பலன்களை பெற :
கோமதி சக்கரமும், தாமரை மணியும் செல்வத்தை ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றை இலவசமாகவே தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் ஆண்டாள் வாஸ்து நண்பர்கள் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். சாளகிராம வழிபாடும், வேல் வழிபாடும் மிகச்சிறப்பான பலன்களை நல்கும்.
வாஸ்துவும், பூஜையறையும் :
இத்தகைய சிறப்பு வாய்ந்த வீட்டின் ஆற்றல் களமான பூஜையறை, வீட்டில் இருக்கவே கூடாத இடம் தென்மேற்கு மூலை (பழனி மூலை), வடகிழக்கு மூலை (ஈசானிய மூலை) மற்றும் பிரம்மஸ்தானம் ஆகும். வடமேற்கிலும், தென்கிழக்கிலும் பூஜையறையினை அமைத்துக் கொள்ளலாம். அதிலும் தென்கிழக்கு மூலை அதி அற்புதமான பலன்களை வழங்கும். இம்மூலையில் பூஜையறை அமைப்பவர்கள் சைவமாக இருப்பது சிறப்பானது.