திருக்கார்த்திகை தீபத் திருநாள்.. வீட்டின் எந்த இடத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.

திருக்கார்த்திகை நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாகக் காலங்காலமாகக் கொண்டாடுகிறோம். இந்த திருக்கார்த்திகை என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.

அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகள், எங்கு ஏற்ற வேண்டும்...?

ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். 

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். 

அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,  சமையல் கூடத்தில் 1 விளக்கு, நடையில் 2 விளக்கு, வீட்டின் பின்புறம் 4 விளக்கு,  திண்ணையில் 4 விளக்கு,  மாட குழியில் 2 விளக்கு,  நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.

27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.

தீபம் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.

விளக்கேற்றும் நேரம் :

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.

சிவன் சக்தியின் அருள் :

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

வாழை இலை :

தீபம் வைக்கும்போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepam 2020 special 5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->