இன்றைய (20-08-2022) ராசி பலன்கள்.. யாருக்கு மகிழ்ச்சி.? யாருக்கு அதிர்ஷ்டம்.? - Seithipunal
Seithipunal


மேஷம்

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நிறைவான நாள்.

சிம்மம்

விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்

வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சிக்கல் நீங்கும் நாள்.

தனுசு

எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.

மகரம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.

கும்பம்

மாணவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாளாக இருந்துவந்த சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.

மீனம்

எந்தவொரு செயல்பாடுகளிலும் உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் திருப்தி உண்டாகும். அசதி குறையும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20.08.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->