இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள்.. இன்றைய (19-06-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வர்த்தகம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். துணிவு நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவதன் மூலம் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

கன்னி

கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினை பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களின் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வாசனை திரவியங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். குழப்பம் குறையும் நாள்.

விருச்சிகம்

உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். மனதில் தோன்றும் பழைய சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

தனுசு

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் ஏற்படும். எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

இளைய உடன்பிறப்புகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உழைப்பு மேம்படும் நாள்.

மீனம்

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொன், பொருள் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு வெளிவட்டார அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18.06.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->