இன்றைய ராசிபலன்கள்... எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். வரவு மேம்படும் நாள்.

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலையை அறிந்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்:

செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் காணப்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதியான நாள்.

கடகம்:

வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படும். குழப்பம் குறையும் நாள்.

சிம்மம்:

தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபகமறதி அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி:

ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான தடைகளின் மூலம் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவுபெறும். சேவை நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

துலாம்:

பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான புரிதல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய வியாபார பணிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு:

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள்.

மகரம்:

நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் மேன்மை உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். அமைதி வேண்டிய நாள்.

கும்பம்:

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கற்பிக்கும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்:

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 mar rasipalan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->