தினம் தினம் திருநாளே... இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமான நாள்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களுடைய ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வரவுகள் மேம்படும் நாள்.

ரிஷபம்:

வாழ்க்கைத்துணைவரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.

மிதுனம்:

நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இன்னல்கள் குறையும் நாள்.

கடகம்:

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

செய்கின்ற முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி:

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வித்தியாசமான வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீது சிறு சிறு அவப்பெயர்கள் தோன்றி மறையும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

துலாம்:

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்:

நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், மந்தத்தன்மையும் காணப்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நட்பு விரிவடையும் நாள்.

தனுசு:

பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சிந்தனைகளில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். அறிமுகமில்லாத இடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதளவில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். திறமைகள் நிறைந்த நாள்.

மகரம்:

வீடு, மனை விற்பது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் சஞ்சலமான சிந்தனைகளும், குழப்பங்களும் தோன்றி மறையும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.

கும்பம்:

வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

மீனம்:

வாக்கு சாதுரியத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபமான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->