இந்த நாள் இனிய நாளாக அமைய... இன்றைய தினப்பலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.

ரிஷபம்:

மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம்:

வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு உண்டாகும் நாள்.

கடகம்:

எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம் ஆகும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். கவலை குறையும் நாள்.

கன்னி:

உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புது பொலிவுடன் காணப்படுவீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

துலாம்:

மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். இன்னல் குறையும் நாள்.

தனுசு:

உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். முன்கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மகரம்:

பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

கும்பம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தாமதம் அகலும் நாள்.

மீனம்:

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 feb rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->