இன்றைய தினப்பலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திறமைகள் வெளிப்படும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்கின்ற முயற்சியில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபவிரயம் நிறைந்த நாள்.

மிதுனம்:

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நிறைந்த நாள்.

கடகம்:

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட சஞ்சலங்கள் நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:

தோற்றப்பொலிவுகளில் மாற்றம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் அதிகரிக்கும் நாள்.

கன்னி:

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். தாமதம் நிறைந்த நாள்.

துலாம்:

செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

தனுசு:

தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்:

செய்கின்ற பணிகளை பதற்றமின்றி செய்வது நல்லது. நண்பர்களின் வழியில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடும், லாபமும் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

கும்பம்:

நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

மீனம்:

உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இன்னல்கள் குறையும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->