தினம் தினம் திருநாளே... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

ரிஷபம்:

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். வெளியூர் நபர்களின் மூலம் தொழில் ரீதியாக அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். நட்பு மேம்படும் நாள்.

மிதுனம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

கடகம்:

எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.

சிம்மம்:

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். அலுவலகத்திலுள்ள சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதியான நாள்.

கன்னி:

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

துலாம்:

காது தொடர்பான இன்னல்கள் மற்றும் வலிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நம்பிக்கையான நாள்.

விருச்சிகம்:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தனவரவு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கான நாள்.

தனுசு:

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

மகரம்:

சிறு தொழில் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாற்றமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்:

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

மீனம்:

இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான ஆதாயம் கிடைக்கும். லாபம் மேம்படும் நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04 feb rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->