வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த அப்டேட் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் வீடியோவின் அளவை 100MBயிலிருந்து 2GBஆக அதிகரிப்பு மற்றும் ஒரே நேரத்தில் 32 பேருடன் குரூப் வீடியோ கால் பேச வசதி ஆகிய சேவைகளை வழங்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமை தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியின் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp status new update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->