கள்ளகாதலியின் தந்தைக்கு போதையேற்றி இளைஞர் செய்த காரியம்.! துடிதுடித்துப்போன மகள்!!
youngman kidnapped illegal lovers father
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் வரதன். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இதனை தொடர்ந்து ஆர்த்திக்கு பிரவீன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணன் நடைபெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆர்த்திக்கு பிரவீனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இருவரும் பிரித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஆர்த்தி தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்தது வந்தார்.
இதனை தொடர்ந்து ஆர்த்திக்கு அதே பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இவர்களது பழக்கம் காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து ஆர்த்தி,தனியாக வீடு எடுத்து சுபாஷ் உடன் வாழ்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அதனால் ஆர்த்தி சுபாஷை விட்டு விலகி திரும்பவும் தனது தந்தை வீட்டிற்கே சென்றுள்ளார்.
இந்நிலையில் கோபத்தில் இருந்த சுபாஷ் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஆர்த்தியின் தந்தை வரதனுக்கு மது வாங்கி கொடுத்து அவர் போதையில் இருந்த நிலையில் கடத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சுபாஷ் ஆர்த்திக்கு போன் செய்து உன் தந்தை என்னிடம்தான் உள்ளார். அவரை நான் கடத்தி விட்டேன். நீ மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால்அவரை விட்டு விடுகிறேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த ஆர்த்தி பதற்றத்துடன் இதுகுறித்து ஆர்த்தி அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திட்டுள்ளார். பபுகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சுபாஷை பெரம்பூர் பகுதியில் கைது செய்து ஆர்த்தியின் தந்தை வரதனை மீட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youngman kidnapped illegal lovers father