அரசனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!
thirupur girl cheated by thindukal boy
திருப்பூரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் தனது படிப்பை 10-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ரெயிலில் குடும்பத்துடன் வந்துள்ளார். அப்பொழுது, திண்டுக்கல்லைச் சேர்ந்த சையது இப்ராகிம் என்ற ஒரு வாலிபர் அவருடன் அறிமுகமாகி அவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
பதிலுக்கு இந்த பெண்ணும் அவருடைய செல்போன் எண்ணை அந்த நபரிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் செல்போனில் பேசியபடி காதலித்து வந்துள்ளனர். இது பெற்றோருக்கு தெரிந்து விடவே அவர்கள் கண்டித்தனர். ஆனால், அதை மதிக்காத பெண் காதலன் பேச்சை கேட்டு அவரை பார்க்க திண்டுக்கல் வந்துள்ளார்.
தன்னை பார்க்க வந்த பெண்ணை, மயக்கி ஆசைவார்த்தைகள் கூறி அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை கொடுத்து அவரை ஒரு தனி இடத்திற்கு அழைத்து சென்று அந்த வாலிபர் அந்த அப்பாவி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கின்றார். அதன் பின்னர் ஒன்றும் நடக்காதது போல அந்த பெண்ணும் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
மீண்டும் இந்த காதல் விவகாரத்தை கண்டு கொண்ட பெண்ணின் பெற்றோர் அவரின் செல்போனை பிடுங்கி வைத்துள்ளனர், அதையும் ரகசியமாய் அந்த பெண் காதலனிடம் கூறி என்னை திருமணம் செய்து எங்காவது அழைத்து சென்று விடுங்கள் என அழுதுள்ளார். அந்த இளைஞர் கிளம்பி திண்டுக்கல் வர சொல்லவே, இவரும் கிளம்பி சென்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வெகு நேரமாகியும் காதலன் அழைத்து செல்ல வரவில்லை.
பின்னர், அவ்வழியே செல்லும் பலர் அந்த பெண்ணை விலைமாது என நினைத்து உல்லாசமாக இருக்க அழைக்க அவள் அழத்துவங்கியதை பார்த்த அருகில் இருந்த கடைக்காரர்கள் அந்த பெண்ணை மீட்டு திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
thirupur girl cheated by thindukal boy