காதலி ஒருபுறம், கல்யாணம் மறுபுறம்.. இளைஞர் எடுத்த பரபரப்பு முடிவு.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் இருந்துள்ளது. இருவரும் காதலித்து நிலையில் சமீப நாட்களில் இருவரும் சண்டையிட்டு பிரிந்து இருக்கின்றனர்.

அதன் பின்னர் மணிகண்டனுக்கு அவரது வீட்டில் இருப்பவர்கள் வேறு பெண்ணுடன் திருமணத்திற்காக நிச்சயம் செய்துள்ளனர். காதலியுடன் தான் பிரேக்கப் செய்துவிட்டோமே என்று நிச்சயித்த பெண்ணுடன் மணிகண்டன் வெளியே சென்று இருக்கின்றார். அப்பொழுது மணிகண்டனின் முன்னாள் காதலிக்கு அவரது திருமணம் குறித்து தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்டனிடம் வந்து கேட்டிருக்கின்றார்.

எனவே, மணிகண்டன் தன்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து தன்னுடைய வீட்டில் இருக்கும் பெற்றோரிடம் மணிகண்டன் கூறிய பொழுது அவர்களை அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி மணிகண்டனிடம் சண்டையிட்டு இருக்கின்றனர்.

எனவே, யாரை திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் மணிகண்டன் தற்கொலை செய்து இருக்கின்றார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy attached with two girls in namakkal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->