கற்பழிக்கப்பட்டது கூட தெரியாமல் 2 வருடம் இருந்த சிறுமி.!! இறுதியில் அரங்கேறிய விபரீதம்.!
a eighth girl abused by teacher and students
உத்திரபிரேதசம் மாநிலத்தில் உள்ள சித்தாப்பூர் மாவட்டத்தை சார்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் நன்றாக படித்து வந்த நிலையில், இவரது படிப்பானது உடன் படித்த சில மாணவர்களின் உறவினர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிறுமியை பள்ளியின் ஆசிரியரின் உதவியுடன் கடந்த இரண்டு வருடங்களாக மிரட்டி பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்து வந்துள்ளனர். காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இவரது புகாரை பெற்ற காவல் துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில், சிறுமியை சீரழித்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதனையடுத்து இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து வீடியோ காட்சியில் இருந்த நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்த நான்கு கொடூரர்களும் ஒரே குடும்பத்தை சார்ந்தவன்கள் என்பதும், கூட்டு குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்த நிலையில், மாணவர்கள் நன்றாக படிக்கவில்லை.
இதன் காரணமாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மாணவர்களை கண்டித்ததால் ஆத்திரமடைந்த நிலையில் உணவில் மயக்க மருந்தை கலந்து மாணவியை திட்டமிட்டு பள்ளி வளாகத்திலேயே வைத்து பலாத்காரம் செய்ததும், இந்த செயலை தொடர்ந்து செய்து வந்த கொடூரர்கள் ஒவ்வொருமுறையும் வீடியோ எடுத்து வைத்ததும், இந்த காட்சியை கண்ட ஆசிரியரும் சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
மாணவியின் உடல் நலக்குறைவால் அடிக்கடி மயங்கிவிழுவது போல சித்தரித்து நாடகத்தை அரங்கேற்றி இந்த செயலை செய்து வந்த நிலையில், இந்த கொடூரங்கள் சிறுமிக்கு தெரியாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
a eighth girl abused by teacher and students