நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செய்திகளை வெளியிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட 60 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்பி வேணுகோபால் நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன அப்படி செய்திகளை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 60 யூடியூப் சேனல்கள் கடந்த 2 மாதங்களில் முடக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். 

சமூக வலைதளங்களில் தேசவிரோத பதிவுகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTube Channels Blocked FEB


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->