மக்களுக்கு நாமத்தை போட்ட ஸ்டாலின்! பன்னீரை வைத்து அதிமுகவை வீழ்த்த முடியாது - அதிமுக எம்பி சீ.வி சண்முகம் குற்றச்சாட்டு!
You can not defeat ADMK with Panneer says MP CV Shanmugam
திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நகை கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து மக்களுக்கு நாமம் போட்ட ஸ்டாலின் !
மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செஞ்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கி பேசிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.சண்முகம் திமுக ஆட்சிக்கு வந்ததில் அனைத்து பொருட்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
வரலாறு காணாத அளவு நெல் அறுவடை தமிழகத்தில் நடந்திருந்தாலும் அரிசி விலையானது உயர்ந்துள்ளது. மேலும் விவசாயிகள் விளைவிக்கும் நெல் அரசாங்கம் வாங்க தயாராக இல்லை எனவும் நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்படவில்லை எனவும் பேசியுள்ளார்.
திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நகை கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்த ஸ்டாலின் 50 லட்சம் பேர் நகைக்கடன் வாங்கியுள்ள நிலையில் அதில் 15 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துவிட்டு மீதி 35 லட்சம் பேருக்கு நாமத்தை போட்டு விட்டார் ஸ்டாலின் என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தேர்தலின் போது ஒரு சொட்டு சாராயம் இருக்காது எனக் கூறிய ஸ்டாலின் அவர் ஆட்சிக்கு வந்ததும் சாராய ஆறாக ஓடுகிறது எனவும் அனைத்து பள்ளி கல்லூரி வாசல் களிலும் கஞ்சாவின் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் பேசிய எம் பி சண்முகம் பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுகவை விழித்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது எனவும் துரோகிகளையும் எட்டப்பர்களையும் வைத்து அதிமுகவை விழித்து விடலாம் என நினைக்க வேண்டாம். எத்தனை வழக்கு போட்டாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளது என ஆர்பாட்டத்தில் பேசியுள்ளார்.
English Summary
You can not defeat ADMK with Panneer says MP CV Shanmugam