எச்சரிக்கை! சர்ச்சையில் சிக்காமல் சில சமயம் அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்...! - அமித்ஷா
Warning Sometimes it is wise to remain silent rather than get caught up in controversy Amit Shah
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் பாஜக தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இதுபோன்ற கருத்துக்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம் என்றும், சில சமயங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும் அமித் ஷா அட்வைஸ் செய்துள்ளார்.

இதனை மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கான பயிற்சி முகாமில் அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்று தெரிவித்ததை அமித் ஷா குறிப்பிட்டார்.
அமித் ஷா:
அப்போது அவர் குறிப்பிட்டதாவது,"தவறுகள் நடக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் மீண்டும் நிகழக்கூடாது. அவர்கள் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது மூத்தவர்களாகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு மாணவரைப் போல இருக்க வேண்டும்" என்று அமித் ஷா நினைவுபடுத்தினார்.
இதனை பாஜக தொண்டர்களும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
English Summary
Warning Sometimes it is wise to remain silent rather than get caught up in controversy Amit Shah