ஓபிஎஸ் இபிஎஸ்க்கு அளவற்ற மகிழ்ச்சி! பெங்களூரில் நடைபெற்ற சந்திப்பு!
VRIDHACHALAM MLA VT KALAISELVAN MEETS CM EDAPPADI PALANISAMY
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட பொழுது, ஏற்பட்ட குழப்பங்களால், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் தலைமையில் சில எம்எல்ஏக்கள் சென்றார்கள். அதிமுகவில் இருந்து கொண்டே தினகரன் பக்கம் 3 எம் எல் ஏ செயல்பட்டு வந்தார்கள்.
மேலும் அவர்கள் தினகரன் கட்சி கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்கள். இந்நிலையில் மேலும் தினகரனின் கட்சி பொறுப்புகளிலும் அவர்கள் இருந்தார்கள். மேலும் அவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவர்களுக்கு எதிராக சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கிடையே நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் தினகரன் கட்சி படுதோல்வி அடைய, மீண்டும் தினகரன் கட்சியில் இருந்த அதிமுகவினரும், மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு படையெடுத்து வருகிறார்கள். அதன்படி அண்மைக் காலமாக பல முன்னணி தலைவர்கள் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக இருந்த மூன்று எம்எல்ஏக்களில் புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த ரத்தினசபாபதி எம்எல்ஏ நேற்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவிற்கு ஆதரவு என்று அதிமுகவில் இணைந்தார். அதே போல விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் இன்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து என்றும் அதிமுகவுக்கு ஆதரவு எனவும் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க மு க ஸ்டாலின் செய்துவந்த முயற்சி படுதோல்வி அடைந்தது. இன்னும் ஒரே ஒரு அதிருப்தி உறுப்பினரான கள்ளக்குறிச்சி பிரபுவும் விரைவில் முதலமைச்சர் பழனிசாமியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதிருப்தியாளர்கள், தினகரன் பக்கம் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவது ஓபிஎஸ் இபிஎஸ்க்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. தன் பக்கம் வந்த அனைவரும் தன்னை விட்டு விலகுவதை பார்த்த தினகரனுக்கோ, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
VRIDHACHALAM MLA VT KALAISELVAN MEETS CM EDAPPADI PALANISAMY