ஒபிஎஸ்-க்கு சசிகலா ஆதரவு? .. அவரே அளித்த விளக்கம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தனது உறவினர்களுடன் தங்கியுள்ளார்.

அப்போது, அங்கு சசிகலாவை ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சசிகலவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து திருவாரூர் புறப்பட்ட சசிகலாவிடம் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளை பேசும் இடம். மக்கள் பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக யாரிடம் சென்றால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இதனை அதிமுக தொண்டர்களிடம் கேட்டால் சரியான பதிலை கூறுவார்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அதிமுக என குறிப்பிட்டு பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலாவே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VK sasikala speech about OPS and EPS assembly issue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->