தேசிய திரைப்பட விருது வென்ற தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் - விஜயகாந்த்!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. 

நேற்று 68-வது தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இசை, இயக்கம், வசனம் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சூரரைப்போற்று திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர் - சூர்யா, சிறந்த நடிகை - அபர்ணா முரளி, பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதைக்கான - சூரரைப்போற்று, சிறந்த படம் -  சூரரைப் போற்று பெற்றுள்ளது. சிறந்த வசனம் (தமிழ்) - மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த திரைப்படமாக  சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சூரரைப்போற்று படத்திற்காக 5 பிரிவுகளில் விருதுகள் பெற்ற நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா ஆகியோருக்கும், சிவரஞ்சனியும்இன்னும்சிலபெண்களும் திரைப்படத்திற்காக விருது பெற்ற இயக்குனர் வசந்த், லட்சுமி பிரியா சந்திர மவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்டோருக்கும், மடோன்னே அஷ்வின், யோகி பாபு உள்ளிட்ட #மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth wis to National Film Award Movies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->