விஜயகாந்த கூறிய ஒத்த வார்த்தையால், ஆடிப்போன தொண்டர்கள்!!
vijayakanth speech in tiruppur
தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் பேசியவை, உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் என்றார்.
அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன். இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறினார். விஜயகாந்தின் இந்த பேச்சை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
vijayakanth speech in tiruppur