விஜயகாந்த் குறித்து விஜயபிரபாகரன் வெளியிட்ட செய்தி.! உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் உசிலம்பட்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியவை, விஜயகாந்த் தலைகுனித்தாலும் தனது கட்சியையும், தொண்டர்களும் தலைகுனிய விடமாட்டார். இதை அவரே கூறியுள்ளார். 

இப்போது சொத்தில் பிரச்சனை வந்து இருக்கிறது. நான் பிரச்சனை இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். ஆனால் ஊழல் செய்த சொத்தில் பிரச்சனை இல்லை. உழைத்த பணத்தை வங்கியில் அடமானம் வைத்து மாணவர்களுக்காக கல்வி சேவை செய்த்தோம், அதனால் சில பிரச்சனைகள் வந்தது இதை நாங்கள் கண்டிப்பாக நிர்வாகத்தில் செலுத்தி விடுவோம்.

நான் அரசியலுக்கு வந்தது வாரிசு அரசியல் என்கிறார்கள் சிலர். தேமுதிக உற்சாகமாக இருந்த போது நான் அரசியலுக்கு வரவில்லை. ஒரு சோதனைக் காலத்தில் தான் அரசியலில் வந்தேன். அரசியலில் பிழைக்க வரவில்லை, உழைக்கத்தான் வந்தேன். வருகின்ற 2020 ஆம் ஆண்டு தை மாதம் மீண்டும் கம்பீர குரலில் விஜயகாந்த் பேசுவார் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay prabhakar says about vijayakanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->