வி.சி.க.வின் மத நல்லிணக்க பேரணியில் பதற்றம்.. வாகன ஓட்டிகளுடன் ஏற்ப்பட்ட வாக்குவாதம்.!
VCK rally today in Pudhuchery
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வரும் மாதம் 2ம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும், வி.சி.க உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்கும் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியான இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கும், காங்கிரஸ், திமுக, வி.சிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்கும் மத நல்லிணக்க பேரணிக்கும் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது.
புதுச்சேரியில் இன்று நடக்கும் இந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்கின்றன., இந்த பேரணி அண்ணாசாலை மற்றும் காமராஜ் சாலையில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது காமராஜர் சாலை மற்றும் அண்ணா சாலையில் மத நல்லிணக்க கூட்டம் நடைபெற்ற பொழுது வாகன ஓட்டிக்களுடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.
English Summary
VCK rally today in Pudhuchery