மத்திய அரசுக்கு எதிராக விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.!!
Vck protest against Central BJP Govt
மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இஸ்மாய அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில் மதச்சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தும், குடியுரிமைத் திருத்தச்சட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 15ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது " என அறிவித்துள்ளார்.
English Summary
Vck protest against Central BJP Govt