சட்டமன்றத்தில் திமுகவின் பலம் குறைந்தது!! தனது பதவியை ராஜினாமா செய்த திமுக கூட்டணி எம்.எல்.ஏ?!
vasantha kumar resign his post
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான எச்.வசந்தகுமார், தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்திற்கு வந்த எச்.வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார் இதையடுத்து, நாங்குநேரி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அவர் பேசுகையில் மக்களவை தேர்தலின் போது நான் வாக்குறுதி அளித்தபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து மக்கள் நல திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றி தரப்படும். பாராளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் நாங்கள் தட்டி கேட்போம்.
English Summary
vasantha kumar resign his post