வன்னியர் 10.5 : உச்சநீதிமன்றத்தில் இன்று? வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்.!
vanniyar reservation case in supreme court dec 13
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்திற்கு எம்.பி.சி பிரிவில் 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் எதிரொலியாக கடந்த அதிமுக ஆட்சியின் போது எம்.பி.சி பிரிவில் வன்னியர் என்ற உள் பிரிவு ஒதுக்கப்பட்டு, 10.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து உத்தரவிட்டார்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட நாள் முதல், அதனை தடைவிதிக்க வேண்டும் என்று, எம்.பி.சி. பிரிவில் உள்ள பிற ஜாதிகள் போர்க்கொடி தூக்கினர். மேலும், இதுசம்மந்தமாக தொடரப்பட்ட பல்வேறு வழக்கில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 100 பக்கங்களுடன் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் தாக்கல் செய்து இருந்தார். மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் பாமக தலைவர் ஜி கே மணி அவர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு, பாமக செய்த மேல்முறையீடு மனுக்கள் இன்று (10.12.2021) விசாரணைக்கு வரவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று (10/12/2021) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த வன்னியர் 10.5 விழுக்காடு வழக்கு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. வரும் திங்களன்று (13/12/2021) விசாரணைக்கு வரலாம் என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
English Summary
vanniyar reservation case in supreme court dec 13