ஆட்சி கலைப்பா? யோசித்து தான் பார்க்கட்டுமே! உதயநிதி நேரடி சவால்.!!
Udhayanithi response to minister murugan comment
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேறுவதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்று இருந்தார். அதன்படி இன்று காலை இளைஞரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அதனை தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் "மோடி தலைமையான மத்திய அரசு ஆட்சியில் இருந்த 9 ஆண்டுகளில் எந்த மாநில அரசையும் கலைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் பாதுகாப்பு இல்லாத சூழலிலும் கூட தமிழக அரசை கலைக்கும் யோசனைை இல்லை" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் "யோசித்து தான் பார்க்கட்டுமே; யோசித்து தான் பார்க்கட்டுமே.!! என மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு சவால் விடுத்துள்ளார்.
English Summary
Udhayanithi response to minister murugan comment