'திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன்'; உதயநிதி ஸ்டாலின் ..! - Seithipunal
Seithipunal


''திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த தொகுதியில் போட்டியிடுவேன்'' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி முடித்துள்ளோம். நாளை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது. திமுக தலைவர் அறிவித்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம் என்றும், மக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 05 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார் என்றும், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து களத்தில் தான் இருக்கிறோம் என்று குறிப்பிட்டதோடு, 99 சதவீதம் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பள்ளிகளில் காலை உணவு திட்டம் உட்பட தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாகவும், திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டேன். தற்போது திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin says he will contest from whatever constituency the DMK leader decides


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->