ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் ஒரு சில அதிகாரிகள் எழுந்து நிற்க வில்லை.

நிகழ்ச்சி முடிந்த பின்பு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு என் மரியாதை செலுத்தவில்லை என ஒரு சிலர் அவர்களைக் கேள்வி கேட்டனர். அதற்கு தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறி இருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, சலசலப்பு உண்டானது. ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், குடியரசு தின விழாவில்  தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran tweet for tamil thai valthu issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->