அமமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாங்கப்பட்ட பதவி.. டி டி வி தினகரன் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


எழும்பூர் பகுதிக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பிரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக கழக அமைப்பு ரீதியாக தற்போது செயல்பட்டுவரும், எழும்பூர் பகுதிக் கழகம் எழும்பூர் கிழக்கு பகுதி மற்றும் எழும்பூர் மேற்கு பகுதி என இரண்டு பகுதி கழங்களாக பிரிக்கப்பட்டு கீழ்காணுமாறு வார்டு கழகங்களை உள்ளடக்கி செயல்படும்.

எழும்பூர் கிழக்கு பகுதி - வார்டு எண்கள்: 61, 104, 107
எழும்பூர் மேற்கு பகுதி - வார்டு எண்கள்: 58, 77, 78 

எழும்பூர் கிழக்கு பகுதி கழக செயலாளராக T.பிரபாகர் (பிளவர்ஸ் ரோடு, சென்னை) , எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளராக T.உதயகுமார் (சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பகுதி கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

பிரிக்கப்பப்பட்டுள்ள பகுதி கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட பகுதி மற்றும் வார்டுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dinakaran new posting for ammk members


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->