இப்படி வேட்டையாடுறிங்களே., இதான் விடியல் ஆட்சியின் லட்சணமா? ஸ்டாலினுக்கு டிடிவி கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சேரன்மகாதேவி சப் கலெக்டர், திருநெல்வேலி எஸ்.பி. ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

"நெல்லை மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடைய கல் குவாரிகளில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களை அள்ளிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சேரன்மகாதேவி சப் கலெக்டர், திருநெல்வேலி எஸ்.பி. ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்திருப்பதாக வெளிவரும்  செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்த விவகாரத்தில் மேலும் பல உயரதிகாரிகளையும் மாற்றுவதற்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

நியாயமாக செயல்படும் அதிகாரிகளை தங்களது வழக்கப்படி தி.மு.க.வினர் வேட்டையாடத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் விடியல் ஆட்சியின் லட்சணமா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about nellai quarry issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->